அறம் புரிந்த நெஞ்சமும், மறம் புரி கொள்கையும்

புகைப்படத் தலைப்பு 4

அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய,
மறம் புரி கொள்கை வயங்கு செந் நாவின்,
உவலை கூறாக் கவலை இல் நெஞ்சின்,
நனவில் பாடிய நல்லிசைக், கபிலர் பெற்ற ஊர் [15]

  • ஒன்பதாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறையைச் சோழ அரசன் பெரும்பூண் சென்னி தாக்கினான். அப்போது சேரன் எதிர்த்துத் தாக்கியதைத் தாங்கமுடியாமல் சென்னியின் படை தன்னிடமிருந்த வேல்களையெல்லாம் போர்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டது. இதனைக் கூறுவதற்குப் பெருங்குன்றூர் கிழார் காட்டும் உவமையில்தான் கபிலர் காட்டப்படுகிறார்.[16]
  • அரசவை கபிலரைப் பணிந்தது. காரணம் அவரது அறம் புரிந்த நெஞ்சமும். மறம் புரி கொள்கையையும் என அறிகிறோம்.
  • இவர் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்நெறி அறிவிக்கக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியது இவரது அறம்புரி நெஞ்சத்தைக் காட்டுகிறது.
  • ‘செந்நா’ என்பது இவரது செந்தண்மை பிறழாத நாவண்மையைப் புலப்படுத்தும்.
  • கவலை என்பதன் எதிர்ச்சொல் உவலை. உவலை = மகிழ்ச்சி. அவருக்குக் கவலையும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை.
  • கனவு = கற்பனை எண்ணங்களின் ஓட்டம். நனவில் பாடுதல் என்பது எண்ணி எண்ணித் திட்டமிட்டுக் கற்பனைகளைச் சேர்த்துப் பாடாமல் இயல்பாக நனவு நிகழ்ச்சி போல் பாடுவது இவரது பாடல் பாங்கு.