
பறம்பு தமிழ்ச் சங்கம் 2019 ஆம் வருடம் திரு. சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற புதினத்தால் ஈர்க்கபட்ட தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி, நூல்கள் பற்றிய ஆய்வு, இயற்கை சார்ந்த வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரிய கலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் முதலியவை சங்கத்தின் செயல்பாடுகளில் முக்கியமானவையாகும்.