
அடிமன வலி
நேசித்த மனங்களைகாலம் பிரித்திட்டால்வலிகளுக்கேதுபாலின பேதம்? தோல்வியில்துவண்டுதுயரில்வாடிமீண்டுவிடும்வடிகால்ஆணுக்கேனோ…. தாடியும் பீடியும்தண்ணியும் கன்னியும்நட்பும் தனிமையுமென…. மாற்றுத் துணை பற்றிமெல்ல உயிர்த்தெழும்வரைசுற்றம் சகித்திடும்…. பெண்ணுக்கதுபெருஞ்சாபம்விட்டு விலகியதால்வீட்டுக்குத் தியாகிவிரும்பியவனுக்கு துரோகிகட்டியவனுக்கு பாவியெனும்சமூகக் கட்டுக்கு…. காவு கொடுத்திட்டவிருப்பங்கள் யாவும்நினைவுகளாய்அடிமனதை அறுக்கையில்பீறிட்டு அழுதிட…. தாழிட்ட கொதிகலன் தடதடத்தடங்கியதுபெண்ணுக்கானஒற்றைச் சமாதானக்கேடயம்சமயத்தில் கண்ணீர்!! – விஜி மணிகண்டன்