
எப்பொழுதாவது
பூக்கும்
குறிஞ்சிப்பூ போல
பூத்துக் கிடக்கும்
பிரியத்துக்காகவே…
இத்தனை நாளும்
நானும் அவனும்
முறைத்துக் கொண்டோம்
மணம் வீசும்
தருணம் மட்டும்
போதுமாம் ..
ஒவ்வொரு நாளும்
பூத்துக் கிடக்க…
இதற்கு பெயர்தான்
காதலோ…
படைப்பாளர் : ச சிவகாமி
புகைப்படம் : Teona Swift
நன்றி : Pexels