
உதடுகளை இறுக மூடிக் காற்றை
உள்ளும் வெளியும் செலுத்தாமல்
பேச்சைத் தடை போட்டு
மௌனம் கொள்ள முயற்சித்தேன்.
விடா மொழிகள் பேசிக் கொண்ட

மனம்…
வேர்கள் பிடிக்க மண் என்றது.
மனமோ …
என்னை தின்றே நின்ற மரம் என்றது.
தாகம் தீர்க்கும் தண்ணீர் என்றது.
மனமோ …
தரை தொடக் கண்ணீர் சிந்துது.
விசிறியின் வீச்சின் குளுமை அருமை என்றது.
மனமோ …
காற்றின் துளி விசிறிச் சென்றது.
நெருப்புகளை சுடர் என்றது
மனம் …
சுடரின் ஒளி புகை என்றது.
பறந்து விரிந்த வானம் என்றது.
மனமோ …
விரித்து பறக்க சிறகு தேடுது.
விடுதலை என்பது சுதந்திரம் தந்தது
மனமோ …
சுதந்திரம் சொல்லால் இருக்குது என்றது.
எண்ணிக்கையில் 75 என்றது.
மனமோ …
எண்ணம் எப்பொழுதும் ஒன்று என்றது.
மனமே இங்கு பெண்ணாக நின்றது.
என்றது எல்லாம் ஏளனம் செய்யுது.
படைப்பாளர் : சிவகாமி
புகைப்படம் : பிக்ஸல் – அருண் கல்லா