பூமியின் சுழற்சியில்நாளொன்றின்இருபத்திநான்கு மணிநேரங்களில்ஒரு சில நொடிகள் கூடவோகுறையவோ செய்யும். துளி துளியாய் சேர்த்த அந்தநொடிபொழுதுகளே நான்குவருடங்களில் ஒருமுழு நாளாக நிறைகிறது. கடிகார முட்களுக்குள்சிக்காதுரகசியமாக மறைந்திருக்கும்அந்த சில நொடிகளைசேமிக்கும்தீவிரத்தில் இருக்கிறேன். எப்பொழுது தேட?எங்கே தேட?காலையிலா ?ஆண்ட்ராய்டு யுகத்திலும்அறிவியல் வளர்ச்சியிலும் என்றுமே இந்த அடுப்படியில்எடுக்கவேண்டிய அவதாரங்களில் மாற்றில்லை. முற்பகல் வேளையில்என்னுடைய பணிகளில் தலையை கொடுக்க,இந்த பாடத்தை முடிக்க உன் உதவி வேண்டும் என்கிறாள் மகள். வாட்டர் கலரை இப்பொழுதேதேடி தர வேண்டி நிற்கிறான் மகன்.அலைபேசியில் அம்மாவிடம்பேசவேண்டிய நேரத்தை இருவரும் மாறி மாறி மாற்றி மாற்றி கொண்டே இருக்கிறோம். இதற்கிடையில் அத்தை வந்து‘மதியம் நான் சமைத்துவிடுகிறேன்’என்பதே இப்போதுஎனக்குப் பிடித்த மூன்று வார்தைகளாகிவிட்டது. விமர்சனங்களை மட்டும்படித்துவிட்டு வாங்கி வைத்திருக்கும்புத்தகங்கள் எல்லாம் என்னை பார்என்னை பார் என்று அலமாரியிலிருந்து அம்பு விடுகின்றன. சில சிறுகதைகள் மனதிற்குள்ளேவடிவம் பெற்று மின்னி மறைந்துவிடுகின்றன. தட்டச்சு செய்யும் பொழுதுகளைதேடுவதே சுவாரஸ்யமான கதையாகிவிட்டது. பிடித்தமான முகநூல் பதிவுகளை எல்லாம்பிறிதொரு நாள் வாசிக்க சேமித்துவைத்து கடக்கிறேன்.என்னுடைய பொழுதுகளுடன்நான் பழகி வெகு காலமாகிவிட்டது. ஐந்து வருடத்திற்கு ஒரு முறைஆட்சியே மாறுகிறதேஇந்த வீட்டு நிர்வாகத்தைநீயும் கொஞ்ச நாள்பார்க்க கூடாதா என்றுநள்ளிரவு வரை பனி சுமையில்மூழ்கியிருக்கும் கணவரைபார்த்து மனசாட்சியில்லாமல்கேட்கமுடியவில்லை என் மனசாட்சியால். ஆமாம் “மனசாட்சியை எப்படி காணாமல்போக செய்வது?”ஏதேனும் வழி இருக்கிறதா? அமைதியாக எங்கோ எனக்காய்அமர்ந்திருக்கும்என்னுடைய பொழுதைஎப்போது தேட? காலையிலா?மதியம்? இரவில்?இல்லை….. அட நான்இன்னும் என்னுடைய பொழுதை எங்கே தேடுவது என்று தான்தேடிக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு பிரச்சனைகளுக்குமத்தியிலும் ஒருபூ பூக்க தானே செய்கிறதுஎன்ற பிரபஞ்சனின் வரிகள் ஒரு புன்னகையை தவழ விட்டுச் செல்கிறது. நாளையாவது எனக்கான பொழுதைகண்டுபிடிப்பேனா ?எத்தனையோ ‘நாளைக்கு’ சென்று விட்டது,ஆனாலும் நாளை மட்டும் மாறாமல்வந்து கொண்டிருக்கிறது. – இரா. நித்யா ஹரி